உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்....
அலையும் நீர் மேவும் குமிழாதல் போலே
ஆவதுப் பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே
ஆவதுப் பொய் ஆவதெல்லாம் ஆசையினாலே
அரச போகமும் வைபோகமும் தன்னாலே
அழியும் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்....
உறவும் ஊராரும் உற்றார் பெற்றாரும்
ஓடிடுவார் கூட வாரார் நாம் செல்லும் நேரம்
ஓடிடுவார் கூட வாரார் நாம் செல்லும் நேரம்
மறை நூல் ஓதுவதும் ஆகுமிதே சாரம்
மனதில் நாம் காணும் சுகமே மாயம்
காணும் சுகமே மாயம்
உலகே மாயம் வாழ்வே மாயம்.....