சந்தோஷம் வேணுமென்றால் இங்கே
கொஞ்சம் என்னை பாரு கண்ணால்
கொஞ்சம் பாரு கண்ணால்
வண்டாட தேவன் மருவும் பூ மாங்கனி
பேசும் வனிதா மணி நேசம் பெறவே இனி
என்னை பாரு கண்ணால் கொஞ்சம் பாரு..(சந்தோசம்)
அன்பாலே நேர் தேடும் ஆனந்தமே கூடும்
பெண் போலே வந்தாடும் காட்சி
ஆணில் அனுராகமே பாட இனிதாகுமே
ஆவலாய் மேவலாம் காதல் பெறவே இனி
கொஞ்சம் பாரு கண்ணால்.....(சந்தோஷம்)
உல்லாசமாய் இந்த உயிரோவியம் வாழ்வில்
உன்னோடு எந்நாளும் வாழும் இன்ப
சல்லாபமே நம்மில் சரி லாபமே
ஸ்வாமி நீ தாமதம் செய்யலாமா இனி
என்னைப் பாரு கண்ணால்
கொஞ்சம் பாரு கண்ணால்.......(சந்தோஷம்)