திருக்குறள் - அதிகாரம் கனவுநிலையுரைத்தல்
-
Showing 1 - 10 of 10
-
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. -
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன். -
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். -
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. -
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. -
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். -
நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது. -
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. -
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். -
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.