பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. லீலா
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ்
ஆண் : வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே…..
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே….
வாராயோ வெண்ணிலாவே
ஆண் : அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்
அகம்பாவம் கொண்ட சதியாள்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே
சிதைந்தது இதம் தரும் வாழ்வே
பெண் : வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே…ஏ….
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே…ஏ…
வாராயோ வெண்ணிலாவே
பெண் : வாக்குரிமை தந்த பசியால்
வாழ்ந்திடவே வந்த சதி நான்
வாக்குரிமை தந்த பசியால்
வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிடச் செய்வார் நேசம்
நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
ஆண் : வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே…ஏ…
வாராயோ வெண்ணிலாவே
ஆண் : தன் பிடிவாதம் விடாது
என் மனம் போல் நடக்காது
தன் பிடிவாதம் விடாது
என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது
நம்மையும் பேச விடாது
பெண் : வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே
பெண் : அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போராடி
அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால்
நல்லறமாமோ நிலவே
இருவர் : வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே…ஏ…..
வாராயோ வெண்ணிலாவே