பாடகர் : டி. எல். மகாலிங்கம்
இசை அமைப்பாளர் : அகஸ்தியர்
ஆண் : வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை
ஓங்கியவனெல்லாம் தாங்கிடவில்லை
தாங்குவது உலகை நீதி நேர்மையடா ஆஆ
தம்பி…வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை
ஆண் : வானிலே வெள்ளி உண்டு
நிலா உண்டு உலகுக்காக
மண்ணிலே பொன் உண்டு
ஊண் உண்டு நமக்காக
ஆண் : கண்ணிலே கருணை உண்டு
கடூரம் உண்டு நீதிக்காக
நண்டு சாக நண்டுகள் பிறந்தது
ஞாலம் உய்வதற்காக…
தம்பி… வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை
ஆண் : தேடினான் ஒருவன்
செல்வங்கள் தன்னை காப்பாற்ற
வாடினான் வதங்கினான்
ஒருவன் தன்னை ஞானியாக்க
கண்டாயா தம்பி கடவுள் காட்டிய உண்மை
தகனம் ஆனான் ஒருவன் மற்றவன் ஒற்றன்
ஆண் : பிச்சை எடுப்பவன் நான்
பிச்சை கொடுப்பவன் நீ
பிச்சை எடுப்பவன் நான்
பிச்சை கொடுப்பவன் நீ
ஆசைக்கு அடிமை நான் அதை அடக்குபவன் நீ
நேசா உன்னை புரிந்தவன் என்றும் அழிவதில்லை
ஈசா உன்னை மறுத்தவன் என்றும் வாழ்ந்தும் வாழ்வதில்லை
ஆண் : தம்பி…வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை
ஓங்கியவனெல்லாம் தாங்கிடவில்லை
தாங்குவது உலகை நீதி நேர்மையடா ஆஆ
வந்தவனெல்லாம் வாழ்ந்திடவில்லை
வாழ்ந்தவனெல்லாம் ஓங்கிடவில்லை