பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : அகஸ்தியர்
ஆண் : துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
பெண் : ஓஹோ….
ஆண் : துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
பவளம் உன் மேனி கொண்டு
எரியும் மதியை விரட்டவோ……
ஆண் : துவளும் கொடி இடையாள்
விரைந்து செல்வது எங்கோ
பெண் : மயங்கும் நேரம் கண்டு
பதுங்கி வந்தது எதற்கோ
மன்னவா…….ஆ……ஆ…….ஆ….
மயங்கும் நேரம் கண்டு
பதுங்கி வந்தது எதற்கோ
மன்னவா என்னைப் பார்க்கவா
உதட்டோடு உதடு பேசவா…..
ஆண் : பேசவா
ஆண் : கண்கண்ட உன் அழகை
கை அள்ளத் துடிக்கின்றது
பெண் : ஆஹா…..ஆ….ஆஅ……ஆ…..ஆ….
ஆண் : கண்கண்ட உன் அழகை
கை அள்ளத் துடிக்கின்றது
விண்காணா உன் பருவத்தை
நான் கொள்ள துடிக்கிறேன்
பெண் : உனக்கென்று பிறந்த நான்
ஆண் : ஆஹா….ஆ….
பெண் : எனக்கென்று வாழ முடியுமா
ஆண் : ஆஹா….ஆ….
பெண் : உனக்கென்று பிறந்த நான்
எனக்கென்று வாழ முடியுமா
கொடுத்தேன் என்னை உனக்கு
எடுத்து சூட்டிக் கொள்
தேவா…….ஆ…….ஆ…..ஆ……
ஆண் : துவளும் கொடி இடையாள்
பெண் :ஆஹா….
ஆண் : விரைந்து செல்வது எங்கோ
பெண் : ஹ்ம்ம்
ஆண் : பவளம் உன் மேனி கொண்டு
எரியும் மதியை விரட்டவோ……
இருவர் : {லலலலல லா லலலா
லலலல லா லல லா லா} (3)