பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : …………………………………..
ஆண் : உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
ஆண் : உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
ஆண் : நான் உனக்காகவே பாடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்
ஆண் : உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
ஆண் : …………………………………..
ஆண் : அன்று ஒரு பாதி
முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி
எதிர்பார்த்து நின்றேன்
கை வளையோசை கடல் பொங்கும்
அலையோசையோ
என செவியாற நான் கேட்க வரவில்லையோ
ஆண் : உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
ஆண் : கம்பன் மகனாக
நான் மாற வேண்டும்
கன்னித் தமிழால்
உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி
செம்மாங்கனி
என் மடிமீது குடியேறி முத்தாடவா
ஆண் : உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
ஆண் : ………………………………
ஆண் : எங்குத் தொட்டாலும்
இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல்
நானிங்கு வந்தேன்
ஆண் : எங்குத் தொட்டாலும்
இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல்
நானிங்கு வந்தேன்
நான் மறந்தாலும்
மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும்
பிரியாத உறவல்லவா
ஆண் : உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்