பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
ஆண் : உன்னோடு வந்தேன்
ஊர் பார்த்து நின்றேன்
பின்னோடு நடந்தேனே
தேடி வந்த மானே
காண்பதென்று நானே
பெண் : லாலலலலா…
லாலலலலா…
லாலலலலா…
லாலலலலா…
ஆண் : லாலலலலா…
ஹேய் ஹேய் எஹ்ய் எஹெய்
லாலலலலா…
லாலலலலா…….ஆஅ…..
பெண் : வெள்ளியலை சத்தமிட்டு
வெண்கடலை முத்தமிட்டு
துள்ளித் துள்ளி பாடுகின்றதோ
ஆண் : முத்தமிடும் சித்திரத்தை
முத்து நவரத்தினத்தை
அங்கும் இங்கும் தேடுகின்றதோ
பெண் : வெள்ளியலை சத்தமிட்டு
வெண்கடலை முத்தமிட்டு
துள்ளித் துள்ளி பாடுகின்றதோ
ஆண் : முத்தமிடும் சித்திரத்தை
முத்து நவரத்தினத்தை
அங்கும் இங்கும் தேடுகின்றதோ
பெண் : காதல் உறவில் அதை தேடும்
ஆண் : காலம் உதவி செய்யக்கூடும்
பெண் : என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
ஆண் : தேடி வந்த மானே
காண்பதென்று நானே
பெண் : பட்டணத்து பச்சைக்கிளி
பட்டிக்காட்டு இச்சைக்கிளி
ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளுமோ
ஆண் : பட்டணத்தில் வந்த பின்னும்
பட்டிக்காட்டு பூவின் வண்ணம்
கண்ணிரண்டை விட்டுச் செல்லுமோ
பெண் : நானோ அழகு வண்ண ரோஜா
ஆண் : நானோ அவள் விரும்பும் ராஜா ஹஹா..
பெண் : என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
ஆண் : உன்னோடு வந்தேன்
ஊர் பார்த்து நின்றேன்
பின்னோடு நடந்தேனே
தேடி வந்த மானே
காண்பதென்று நானே
இருவர் : லாலலலலா…
லாலலலலா…
லாலலலலா…
லாலலலலா…