நிலத்தில் நடக்கும்
நிலவை கண்டேன்
சிறகு இரண்டு
முளைத்து நின்றேன்
எதற்கு பிறகு
வேதனை கொண்டேன்
சிரிக்க மறுத்த
அமுதம் தின்றேன்
நிலவின் ஒளியை
மறைப்பதேது
மனதில் இருட்டை இறைக்கிறது
என் பௌர்ணமி
எங்கெ தேடுகிறேன்
என் வானத்தில்
தூண்டிலை வீசுகிறேன்
பிறையென அது தெரிகிறதா
என் கனவினை வெட்டி சாய்க்கிறதா
முளைத்த சிறகும் முறியும் என்றால்
பறவையின் கதி என்ன…
இதயமும் இன்று
கணக்கிறதே
பழு என்னை சுற்றி இழுக்கிறதே
மறத்தல் இனியும் சாத்தியம் தானா
நடக்கும் நிலையும் போகவைத்தெனா
உயிரை துறந்த
உயிர் அணுவே
தினமும் வரும்
என் பகற் கனவே
இனியும் எதற்கும் வேலை இல்லை
உன் பணிகள்
எனக்கு தேவை இல்லை
வழி ஒன்று வரும்
வேளையிலே
என்னை காணவில்லை
என்று நொறுங்குவேன்
வழியை திறக்க முடியுமா…
உயிரே என் உயிரே