பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
ஆண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்….ம்ம்…
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம்……ம்ம்ம்…..
வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
ஆண் : குயிலே என் காதோடு நீ பாட வா
மலரே உன் இதழ் கொண்டு நீ பேச வா
ஆண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்….ம்ம்…
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
ஆண் : அலைகளின் நாட்டியம்
கரை மீதுதான் ஆஹா ஹாஹா
இலைகளின் நாட்டியம் கிளை மீதுதான்
இவைகளும் ஆட……ஆஆ…..ஆ…..
இயற்கையும் பாட……ஆஆ…..ஆ…..
இறைவா உன் கற்பனை…ஈ…..
வியக்கும் என் சிந்தனை
ஆண் : பாதத்தை வைத்தால்
பழங்கதை சொல்லும் சருகுகளே
பறவையைப் பார்த்தால்
மனதினில் முளைக்குது சிறகுகளே
ஆண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்….ம்ம்…
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
ஆண் : மேகமெனும் பெண்ணொருத்தி
மோகம் கொண்ட நேரத்திலே
காற்றென்னும் காளை வந்தான் தேடி
கல்யாணம் நடந்ததடி கூடி
ஆண் : மழையோ பெற்ற பிள்ளை…..ஈஈ….
அதிலே பல கவிதை
ஹே மலைகளின் மேலே அருவி விழ ஆஹாஹா
மத்தளம் போலே ஒலியும் எழ
ஜதியதில் பிறக்க…….ஆ…..
நதி அதை ரசிக்க…..ஆ…..
ஆண் : சலங்கை போல் நெல்மணி…..
குலுங்கும் வயல் பெண்மணி
புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம்
கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம்
ஆண் : மூங்கில் காட்டோரம்…..ம்ம்ம்…..
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம்…..ம்ம்ம்…….
வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
ஆண் : லாலாலாலாலா லலலலலல
லாலாலாலாலாலாலா…..
விசில் : ……………………..