பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
ஆண் : கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
இறைவனின் கலை நயம் இயற்கையின் அதிசயம்
உலகொரு ஓவியம் என்பேன்
அதில் ஒரு அபிநயம் கண்டேன்……ஆ……ஆ…..
ஆண் : கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
ஆண் : பூபாள ராகம் ஆ…..ஆ…..
பூ பாடும் நேரம் ஆ……ஆ……ஆ..
தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை
தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை
தடாகம் குதித்திட தாமரை குளித்ததமா
வெள்ளி நிற மீன்களும் வெளி வந்து ரசித்ததமா
ஆண் : கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
ஆண் : பச்சை வண்ண சேலை ஆ…..ஆ…..
கட்டிகொண்ட பூமி ஆ…….ஆ……ஆ….
வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை
வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை
வண்ண வண்ண கோலங்கள் போட்டிடும் மேகங்களே
சின்ன குயில் ராகங்கள் கேட்டிடும் காடுகளே
ஆண் : கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது