பாடகர்கள் : சைந்தவி, ஜி. வி. பிரகாஷ், மற்றும் பி. கோபால கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத்
ஆண் : மழை வரும் நேரம்
உன்னை நினைத்தேன்
மழை நின்ற போதும்
மெல்ல நனைந்தேன்
பெண் : இதயத்தின் அறை இன்று
திறக்கிறதே உன் காலடிச்சுவடுகள்
கேட்கிறதே
ஆண் : உயிருக்குள் உன் குரல்
ஒலிக்கிறதே
என் நிழல்லுக்கும் உன் முகம்
தெரிகிறதே
பெண் : காற்று உள்ள காலம்
அதுவரைக்கும் காதல் இந்த
மண்ணில் நிலைத்திருக்கும்
ஆண் : மழை வரும் நேரம்
உன்னை நினைத்தேன்
மழை நின்ற போதும்
மெல்ல நனைந்தேன்…
ஆண் : நினைவினில் நீதான்
நாள்தோறும் வருகிறாய்….
கனவிலும் பெண்ணே
நீங்காமல் தொடர்கிறாய்…
பெண் : நெருக்கத்தில் என்னை
தீ மூட்ட வருகிறாய்
இருந்தும் ஏன் கொஞ்சம்
இடைவெளி நீ விடுகிறாய்….
ஆண் : மனசுக்குள் தயக்கங்கள்
இருக்கிறதே ஏய் ய்
தயக்கத்தை மயக்கங்கள்
ஜெய்க்கிறதே ஏ…
பெண் : வார்த்தையில் மௌனங்கள்
வெல்கிறதே
மௌனமும் காதலை
சொல்கிறதே
ஆண் மற்றும் பெண் :
வானமுள்ள காலம் அதுவரைக்கும்
காதல் இந்த மண்ணில்
நிலைத்திருக்கும்
ஆண் : மழை வரும் நேரம்
உன்னை நினைத்தேன்
பெண் : ……………….
ஆண் : ஒருமுறை என்னை நீ
பார்த்தால் கொதிக்குதே…
மறுமுறை பெண்ணே நீ
பார்த்தால் குளிருதே ஹே…
பெண் : உன் மடி சாயும்
இந்நேரம் பிடிக்குதே…
உன்னுடன் போகும்
பாதைதான் இனிக்குதே…..
ஆண் : தாயென வாழ்க்கையில்
வந்துவிட்டாய்
என் தனிமைக்கு தனிமைகள்
தந்துவிட்டாய்
பெண் : உதிரத்தில் முழுதாய்
கலந்துவிட்டாய்
என் பெண்மையை பூவாய்
மலரவிட்டாய்
ஆண் மற்றும் பெண் :
பூமியுள்ள காலம் அதுவரைக்கும்
காதல் இந்த மண்ணில்
நிலைத்திருக்கும்
பெண் : மழை வரும் நேரம்
ஆண் : உன்னை நினைத்தேன்
பெண் : மழை நின்ற போதும்
ஆண் : மெல்ல நனைந்தேன் ஹே….