பாடகர் : சுனந்தன்
இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன்
ஆண் : உந்தன் கற்பனையில்
சுடு பாலையின் மேல்
ஒரு ஒட்டகத்தில் போகின்றோம்
ஆண் : இது யார் நிலமோ
எவர் ஆள்கிறரோ
என்னானாலுமே வா செல்வோம்
ஆண் : தென்றல் கிழக்கிருந்து
வெய்யில் மேற்கிருந்து
அந்த மண் அங்கு மின்னிடும் பார்
ஆண் : நாம் அங்கே போவோமா….
மாயக் கம்பளி மேல்
அரேபிய இரவினிலே…..
ஆண் : அந்தத் தெருக்களிலே
நாமும் பறக்கையிலே
நம் வாசத்தில் ஏலக்காய்
மணம் வீசும் கடை
பணம் பேசும் உடை
இந்தப் பட்டுடை யாருக்காய்…..
ஆண் : மனம் அள்ளும் இசை
புரியாது திசை
மதி மயக்கும் நிலாவினிலே….
ஆண் : எது உண்மை இங்கே
எது கனவு இங்கே
அரேபிய இரவினிலே
ஆண் : அரேபிய யாமம்
பகல் போலத் தோன்றும்
ஓ எப்போதுமே
ஓ சூடாகவே
ஓர் வாழ்க்கை இங்கே
ஆண் : அரேபிய யாமம்
கனவைப் போல தோன்றும்
விண்ணில் மண்ணிலே
உன்னில் என்னிலே
மாயம் கண்ணிலே…..
ஆண் : இந்தப் பாதை இங்கே
நன்மை பேராசை என்று
ரெண்டாகி போகும் போதிலே…
ஆண் : இருள் யாவும் நீக்க
முடிவென்ன பார்க்க
உந்தன் வாழ்க்கை உந்தன் கையிலே