பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஓஹோ…..ஓஹோ……ஓஹோ…..
ஆ…..ஆ….ஆஆ…ஆஆ…ஆஆ….ஆ…
பெண் : ஆசைகளோ ஒரு கோடி
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக
அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல்
விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
பெண் : மல்லிகை பூ வாசனை
இந்நாளில் எனை வாட்டும் வேதனை
மல்லிகை பூ வாசனை
இந்நாளில் எனை வாட்டும் வேதனை
நிலவென்னும் பொன்மேனி
நெடுந்தூரம் இருந்தாலும்
ஒளியென்னும் கையாலே மலரைத் தழுவி
மயங்கும் நிலையைக் கண்டு…
பெண் : ஆசைகளோ ஒரு கோடி
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக
அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல்
விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
பெண் : கண்ணிலிருந்து அம்பு பறந்து
எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
தாபக் கனலை வாரிப் பொழிய
தாவி வந்தேன் சரணம் அடைய
கண்ணிலிருந்து அம்பு பறந்து
எந்தன் நெஞ்சில் வந்து புகுந்து
தாபக் கனலை வாரிப் பொழிய
தாவி வந்தேன் சரணம் அடைய
கங்கை போல மங்கை
எந்தன் அருகில் வருவாய்….
பெண் : ஆசைகளோ ஒரு கோடி
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக
அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல்
விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
பெண் : முகிலிலிருந்து குளிர்ந்த
பனியும் வீசும்
தரையில் இருக்கும் மலரைத் தடவிப் பேசும்
உனையே நினைந்தேன் மலர்ந்தேன் மலர்ந்தேன்
அழகிய கனிவுடல் நீ தொடும் புது மடல்
அழகிய கனிவுடல் நீ தொடும் புது மடல்
இருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே
அருகினில் நெருங்கிட உனக்கென பயமோ
இணைவோம் கனிவோம் மகிழ்வோம்…..