திருக்குறள் - அதிகாரம் பயனில சொல்லாமை
-
Showing 1 - 10 of 10
-
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். -
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது. -
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை. -
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. -
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். -
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். -
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. -
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். -
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். -
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.