நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதியில் இன்று சாமி தரிசனம்.
நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று (29 .09 .2021) காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். பெருமாளை தரிசித்து விட்டு கோயிலில் இருந்து வெளியில் வந்தது முதல் அவர்களது காரில் ஏறும் வரை வீடியோகிராபர்களும், போட்டோகிராபர்களும் விடாமல் 'க்ளிக்'கிக் கொண்டே இருந்தனர். இருவரும் பொறுமையாக அனைவருக்கும் 'போஸ்' கொடுத்தனர்.
நடுவில் கொஞ்சம் வயதான ரசிகர் ஒருவர் நயன்தாராவுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கேட்க, அந்த ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்டார் நயன்தாரா. நயனும், சிவனும் கைகோர்த்தபடியே தான் நடந்து வந்தனர். அவர்களுக்கு பாதுகாவலர்களாக சிலரும் கூடவே நடந்து வந்தனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் உள்ளது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் அவரது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். எல்லாவற்றிற்கும் சேர்த்து வேண்டுதலுக்காக இவர்கள் திருப்பதி சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
What's Your Reaction?