பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
உன் காதில் விழாதோ
என் கண்ணே என் நெஞ்சின்
சோக ராகம்
ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
ஆண் : நீ தந்த பாசம் என் காதல் நேசம்
எல்லாமும் இன்று மாயங்களா
நீ தந்த பாசம் என் காதல் நேசம்
எல்லாமும் இன்று மாயங்களா
ஆண் : கங்கை நீர் கூட தீயாகும்
எங்கே என் சோகம் மாறும்
கங்கை நீர் கூட தீயாகும்
எங்கே என் சோகம் மாறும்
ஆண் : நீ போன பாதை
நான் தேடும் வேளை
என் கண்ணே…….
என் நெஞ்சின் சோக ராகம்
ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
ஆண் : இன்பங்கள் என்று
நாம் தேடிச் சென்று
துன்பங்கள் என்னும்
ஊர் சேர்கிறோம்
ஆண் : இன்பங்கள் என்று
நாம் தேடிச் சென்று
துன்பங்கள் என்னும்
ஊர் சேர்கிறோம்
ஆண் : பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்
பந்தம்தான் வாழ்வின் துன்பம்
பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்
பந்தம்தான் வாழ்வின் துன்பம்
ஆண் : தாய் என்னும் தெய்வம்
சேய் வாழத்தானே
என் கண்ணே
என் நெஞ்சின் சோக ராகம்
ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
உன் காதில் விழாதோ
என் கண்ணே என் நெஞ்சின்
சோக ராகம்
ஆண் : யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்