பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
மற்றும் டி. ஜி. லிங்கப்பா
ஆண் : துள்ளி வரப் போறேன்….
ஏ…..ஏ…..ஏ……ஏஹ்….ஏ…..
சுருள் சுருளா….ஆஅ……ஆ…..
பாட்டுகளை அள்ளி விடப் போறேன்….ஏ…..ஏ…..ஏ
அய்யா எஞ்சாமிகளே
இந்தப் திரையைக் கொஞ்சம் தூக்கிடுங்கோ….
ஓஒ…..ஓஒ…..ஓ……
ஆண் : ஹே…..ஏ………
இருவர் : நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு
நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு
ஆண் : ஓங்கி வளரும் கலையைத் தலையிலே
தாங்கி வளரும் திருநாடு
தாங்கி வளரும் திருநாடு
இருவர் : நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு
பெண் : சொந்த கழுகு போலே
இன்பம் கருகல் வர
கொம்பை வளைத்து கொண்டு தொங்குமே
ஆண் : அதை கொத்த பறவை
வந்து தங்குமே….ஏ…..ஏ……ஆஅ…..ஆஅ…..ஆ……
பெண் : சொந்த கழுகு போலே
இன்பம் கருகல் வர
கொம்பை வளைத்து கொண்டு தொங்குமே
ஆண் : அதை கொத்த பறவை
வந்து தங்குமே
பெண் : உயர் பண்பு பரம்பரையில்
அன்பும் அறனும் சேர்ந்து
ஆண் : பசுமையாகி வளம் பொங்குமே
இருவர் : தென்றல் பெருமை பாடிவரும் எங்குமே
குல பெருமை பாடிவரும் எங்குமே
இருவர் : நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு
பெண் : மதுரத் தமிழ் வழிந்து
உதிரத்தொடு கலந்து
மனதில் துணிவுகொண்டு வாழ்ந்தவர்
சக்தி வளரக்கலை பயின்று தேர்ந்தவர்
பெண் : மதுரத் தமிழ் வழிந்து
உதிரத்தோடு கலந்து
மனதில் துணிவுகொண்டு வாழ்ந்தவர்
சக்தி வளரக்கலை பயின்று தேர்ந்தவர்
ஆண் : அன்று எதிரிப்படை யெழுந்து
பதறி மிகச் சினந்து
இமயச் சரிவில் வந்த போதிலே
வெற்றி எமக்கென்றே முழங்கிற்று காதிலே
வெற்றி எமக்கென்றே முழங்கிற்று காதிலே
இருவர் : நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு
நாங்க பொறந்த தமிழ் நாடு
இது நாலு மொழிகளின் தாய் வீடு
இருவர் : மலையாளம் புகழ்வெகு நீளம்
எங்கள் மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்
பெண் : அலையாடும் கடல் விளையாடும்
அலையாடும் கடல் விளையாடும்
ஆண் : அக்கம் பக்கம் கொக்குகளும்
வட்டமிட்டுப் பறக்கும்……….
இருவர் : மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்
பெண் : பாக்குமரத்திலே பாளை சிரிக்கும்
பச்சை பட்டாடைபோல் கதலி இலை விரிக்கும்
ஆண் : உவ்வா
பெண் : பாக்குமரத்திலே பாளை சிரிக்கும்
பச்சை பட்டாடைபோல் கதலி இலை விரிக்கும்
ஆண் : தேக்கு மரங்கள் விண்ணை இடிக்கும்….ம்ம்ம்….
இடிக்கும் இடிக்கும் இடிக்கும்
தேக்கு மரங்கள் விண்ணை இடிக்கும்….
இன்னும் சித்திரைச் சோலையெல்லாம் கண்ணைப்பறிக்கும்
இருவர் : மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்
ஆண் : அழகுக் குயில்கள் வந்து பாடிக்கிடும்
தென்னையை மிளகுக்கொடி படர்ந்து மூடிக்கிடும்
அழகுக் குயில்கள் வந்து பாடிக்கிடும்
தென்னையை மிளகுக்கொடி படர்ந்து மூடிக்கிடும்
பெண் : சிலுசிலுக்கும் அருவி ஓடிக்கிடும்
சிலுசிலுக்கும் அருவி ஓடிக்கிடும்
மயில் சிறகை விரிச்சிகிட்டு ஆடிக்கிடும்
ஆண் : தேனிருக்கும் பூவிருக்கும்
பெண் : மானிருக்கும் வனமிருக்கும்
ஆண் : தேனிருக்கும்
பெண் : பூவிருக்கும்
ஆண் : மானிருக்கும்
பெண் : வனமிருக்கும்
இருவர் : செங்கனிகளுமிருக்கும்
தின்றால் மிகு
ஆண் : இனிக்கும்……..
இருவர் : மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்
மலையாளம் புகழ்வெகு நீளம்
வற்றா வளங்கள் அதன் அடையாளம்