பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : தென்பாண்டி சீமை ஓரமா
பெண் : என் மாமன் வீட்டுத் தோட்டம்
ஆண் : தை மாசம் மாலை நேரமா
பெண் : பூ வாசம் ஆள தூக்கும்
ஆண் : நித்தம் நித்தம்
இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம்
என்று பூவ சுத்தும்
பெண் : நீ வட்டம் போடும்…….
பட்டுப் பூச்சி மாமா என் மாமா
பெண் : தென்பாண்டி சீமை ஓரமா
ஆண் : ஒன் மாமன் வீட்டுத் தோட்டம்
பெண் : தை மாசம் மாலை நேரமா
ஆண் : பூ வாசம் ஆள தூக்கும்
பெண் : நித்தம் நித்தம்
இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம்
என்று பூவ சுத்தும்
ஆண் : நான் வட்டம் போடும்
பட்டுப் பூச்சி
தாம்மா நீ வாம்மா
பெண் : மஞ்சள் குளிக்கையில மங்கை
உடல் முழுதும் காயத்த நான் பார்த்தேன்
ஆண் : எங்க காமி
பெண் : ஹ்ம்ம்….கைய எடு…..
பெண் : மஞ்சள் குளிக்கையில மங்கை
உடல் முழுதும் காயத்த நான் பார்த்தேன்
ஆண் : உன் ஒடம்புலதான் நான் புகுந்துக்கிட்டேன்
உன் உசிருலதான் நான் சேர்ந்துக்கிட்டேன்
பெண் : பேசி மயக்குற ஆசாமி
உன்ன பாத்து நடுங்குறேன் போ சாமி
ஆண் : என் நரம்புகள் துடிக்குது வா மாமி……
பெண் : தென்பாண்டி சீமை ஓரமா
ஆண் : ஒன் மாமன் வீட்டுத் தோட்டம்
பெண் : தை மாசம் மாலை நேரமா
ஆண் : பூ வாசம் ஆள தூக்கும்
பெண் : நித்தம் நித்தம்
இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம்
என்று பூவ சுத்தும்
ஆண் : நான் வட்டம் போடும்
பட்டுப் பூச்சி
தாம்மா நீ வாம்மா
பெண் : வரமாட்டேன் போ……
ஆண் : மானே மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
தாவணி ஏன் உனக்கு
பெண் : எப்படி எப்படி எப்படி
இன்னொரு வாட்டி சொல்லு
ஆண் : மானே மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
தாவணி ஏன் உனக்கு
பெண் : எப்படி எப்படி
இன்னொருவாட்டி சொல்லு
ஆண் : மானே மரிக்கொழுந்தே
தேனே தினைக்கருதே
தாவணி ஏன் உனக்கு
பெண் : நீ ரசிக்கிறதை
நான் பார்த்துபுட்டேன்…….
ஆண் : அஹ்ஹான்…..
பெண் : உன் பருவத்துக்கு
நான் போர்வையிட்டேன்
ஆண் : பாடா படுத்துற நீ நீ நீ…..
பட்டு பூவா பறக்குற வா வா நீ…..
பெண் : என் வயசுக்கு
இது ஒரு விளையாட்டு
ஆண் : தென்பாண்டி சீமை ஓரமா
பெண் : என் மாமன் வீட்டுத் தோட்டம்
ஆண் : தை மாசம் மாலை நேரமா
பெண் : பூ வாசம் ஆள தூக்கும்
ஆண் : நித்தம் நித்தம்
இந்த வண்டு சத்தம்
முத்தம் முத்தம்
என்று பூவ சுத்தும்
பெண் : நீ வட்டம் போடும்…….
பட்டுப் பூச்சி மாமா என் மாமா
ஆண் : ஆமா……………….