பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு….
ஆண் : அஞ்சி அஞ்சி ஓயாம
கெஞ்சுகிற ஆசை ஒன்னு
பெண் : பிஞ்சு இது தாங்காது
சொல்லிவிடும் போதுமுன்னு
ஆண் : தோதா அணைச்சபடி
தாங்கிப் புடிப்பேன்
பட்டுச்சேலை கசங்காம
பேசி முடிப்பேன்
பெண் : அந்தியில பந்தி
வைக்கும் போது
என்ன வரம் வேணுமின்னு கேளு
ஆண் : அதற்குள்……தாகம் தணிஞ்சிரும்
பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு….
பெண் : வச்ச கண்ணு மாறாம
பச்சகொடி காத்திருக்கு
ஆண் : உச்சந்தலை சூடேறி
உன்னதொட்டு குளுந்திருச்சு
பெண் : ஆத்து மணலோரம்
ஊத்து பறிச்சு
கைய சேத்து அணைச்சபடி
முங்கி குளிச்சு
ஆண் : அல்லிக்கொடி பின்னுவதைப் போல
தண்ணிக்குள்ள நின்னுக்கிட்டு நாம
பெண் : அடாடா அதுதான் புது சுகம்…..
ஆண் : மானே உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்த மேகக் கூட்டம் வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
பெண் : மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்
அந்தி மாலைக் காத்து வழியா
வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு
ஆண் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு……
இருவர் : வந்துச்சா வந்துச்சா சொல்லு சொல்லு……