பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : தேவேந்திரன்
ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்……
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…..
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்……
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்……
ஆண் : சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்
நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்…..
ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ஆண் : மாணிக்க தொட்டில் கட்டி மெத்ததான் விரிச்சே….
தாலாட்டு பாட்டு படிச்சே…….
நாளும் கண்ணு முழிச்சே…….
மாராப்பில் என்ன மூடி பாலத்தான் கொடுத்தே….
ஆளாக்கி என்ன வளத்தே……
வாழ உயிர் கொடுத்தே……
ஆண் : காலம் செய்த கோலமிது
குத்தத்தை யார் மேல் சொல்லுவது
காலம் செய்த கோலமிது
குத்தத்தை யார் மேல் சொல்லுவது
அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான்
யார் கிட்ட சொல்லி அழுவேன்
ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ஆண் : கண் கெட்டு போன பின்பு தெய்வத்த அறிஞ்சேன்
ஏக்கத்தில் நின்னு துதிச்சேன் ஏங்கி நெஞ்சு கொதிச்சேன்
கை விட்டு போன செல்வம் மீண்டும் தான் வருமா
காயங்கள் ஆறி விடுமா…காலம் மாறி வருமா…
ஆண் : இருண்ட வானம் வெளுக்குமா…
நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா…..
இருண்ட வானம் வெளுக்குமா……
நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா……
அம்மாடி என்ன செய்ய மன்னிக்கணும் என்னதான்
யார் கிட்ட சொல்லி அழுவேன்……
ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
எல்லாமே நெனச்சு ஏக்கத்தில் குடிச்சேன்
நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்…
ஆண் : ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…