பாடகர்கள் : கே ஜே யேசுதாஸ் மற்றும் பி சுசீலா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
மனசுல என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடய்யா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா
மனசில என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடய்யா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா
ஆண் : உன்னுடைய புன்னகையில்
உறங்கும் வெண்ணிலவு
உன்னப் பெத்த புண்ணியத்தில்
மயங்கும் பெண்ணிலவு
ஆண் : மனசுல என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடய்யா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா…
பெண் : என் கதை கேளடா
துன்பம் எத்தனை நாளடா
மண் தரை மீதிலே நான் சிந்திய பாலடா
ஒரு தெய்வமும் வந்தது
இங்கு தஞ்சமும் தந்தது
அந்த நன்றியை நானும்தான்
இங்கு எப்படி சொல்வது
ஆண் : இங்கு காலம்தான் நாம் சேர
பாலங்ககள் இட்டதம்மா
எதிர்பாராமல் தேடாமல் பாசமும்
நேசமும் வாசலில் வந்தது
பெண் : மனசில என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடடா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமடா
ஆண் : பூமரச் சோலைகள்
என்றும் பூமிக்கு பாரமா
சூடிடும் மாலைகள்
என்றும் சாமிக்கு பாரமா
ஆண் : பிறை சந்திரன் கூடத்தான்
கறை கொண்டது பாரம்மா
குறை உள்ளது என்பதால்
வானம் கை விட்டு போகுமா
பெண் : இந்த ரோஜாவும் முள்ளோடு
உன்னிடம் வந்ததய்யா
உன் தோள் மீது நாள்தோறும்
நானொரு பாரமோ நீயொரு பாரமோ
ஆண் : மனசுல என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடய்யா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமய்யா
ஆண் : உன்னுடைய புன்னகையில்
உறங்கும் வெண்ணிலவு
உன்னப் பெத்த புண்ணியத்தில்
மயங்கும் பெண்ணிலவு
பெண் : மனசுல என்ன நெனச்சே
மழலையில் சொல்லிடடா
வருத்தம் இருந்தா மாறுகிற நேரமடா..
ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
ம்ம்ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்ம்ம்ம்ம்……