பாடகி : ராதா ஜெயலக்ஷ்மி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : மாலை மயங்குகின்ற நேரம்
பச்சை மலை வளரும் அருவியோரம்
மாலை மயங்குகின்ற நேரம்
பச்சை மலை வளரும் அருவியோரம்
பெண் : காலை கமல மலர்ப் போலே முகமலரைக்
கண்டேன் காதல் கொண்டேன்
காலை கமல மலர்ப் போலே முகமலரைக்
கண்டேன் காதல் கொண்டேன்
பெண் : நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன்
இரு நீலக் கருவிழியால் வென்றான்
நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன்
இரு நீலக் கருவிழியால் வென்றான்
பெண் : கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை
அணைத்த குமரன் அவன் அமரன்
கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை
அணைத்த குமரன் அவன் அமரன்
பெண் : மாலை மயங்குகின்ற நேரம்
பச்சை மலை வளரும் அருவியோரம்
பெண் : எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல்
எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல்
எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல்
எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல்
பெண் : கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை
கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை
கண்ணே என்றான் கண்ணன்
பெண் : கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை
கண்ணே என்றான் என் கண்ணன்
பெண் : உடலும் உயிரும் என வாழ்வோம்
இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம்
உடலும் உயிரும் என வாழ்வோம்
இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம்
பெண் : கடலும் கதிரும் எனக் களித்து மகிழும்
எங்கள் கருத்தில் இன்பம் நிலவும்
கடலும் கதிரும் எனக் களித்து மகிழும்
எங்கள் கருத்தில் இன்பம் நிலவும்
பெண் : மாலை மயங்குகின்ற நேரம்
பச்சை மலை வளரும் அருவியோரம்
பெண் : காலை கமல மலர்ப் போலே முகமலரைக்
கண்டேன் காதல் கொண்டேன்