பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்
ஆண் : குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்
ஆண் : மண்ணோடு கூடும்தான்
மண்ணாய் போகும்…ம்ம்…
தன்னாசை குஞ்சுகள் எங்கே வாழும்…..ம்ம்..
சிறகும் சருகாய்…….உதிர்ந்தே போகும்
ஆண் : குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்
பெண் : லா லாலா லா லா லால
லாலா லா லா லால
ஆண் : ஆறுதல் கூறவோ என் தேவதை வந்தது
பாலைவனம் தேடி ஒரு நதி வந்தது
மெல்லிய பார்வையா நீ சொல்லிய வார்த்தையா
என் இதயம் நம்பிக்கையில் உதிக்கின்றது
ஆண் : இலையே உதிர்ந்த பின் மலர் காட்சியா
இனியும் உனக்குள்ளே மனக் கோட்டையா
நான் உனது நினைவில் இனியும் வாழ்ந்து பார்க்கிறேன்
உருகும் எனது மனதை உனக்கு பாடலாகினேன்
ஆண் : குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்….
ஆண் : உங்களை ஆசையா
என் நெஞ்சில் தாங்கினேன்
பாசத்திலே பாரங்களும் சுகமானது
கண்களை கூடதான் நான் மூடுவதில்லையே
தூக்கமின்றி வாழ்வதற்கோர் வரம் கேக்கிறேன்
ஆண் : நதியே நெருப்பிலே எரிகின்றதே
விழி நீர் அணைத்திட துடிக்கின்றதே
எனது விழியில் சிரிக்கும் மலர்கள் வாடி போகுமோ
விதியின் வழியில் கவிதை பறவை ஓடி போகுமோ
ஆண் : குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்….
ஆண் : மண்ணோடு கூடும்தான்
மண்ணாய் போகும்…ம்ம்…
தன்னாசை குஞ்சுகள் எங்கே வாழும்…..ம்ம்..
சிறகும் சருகாய்…….உதிர்ந்தே போகும்
ஆண் : குடகு மலைக் காடு
அதில் குருவிக்கொரு கூடு
குருவி பறந்தோடும்
அந்த கூடு மண்ணில் வாடும்