இருளிலே நிலவொளி போல்
அருகிலே அவர் வருவார்
மாறிடாத பிரேம ரூப ராஜன்
மனதிலே கோயில் கொண்ட நேசன் (இருளிலே)
வரும் அவரிடம் வாஞ்சையாகவே
வகையுடன் சுவையோடு பேசுவேன்
விரும்பிடும் அவர் எண்ணம் போலவே
விளங்கு மெய்காதல் வாழ்க்கை நாடுவேன் (இருளிலே)
காதலின் சோலை கனியை இவ்வேளை
காணவே கண்கள் ரெண்டும் எதிர்பார்க்குதே
உள்ளம் வரவேற்குதே ஓடிடும் மானினம் போலே
ஊடுருவிடும் விழியாலே..
உண்மை உறவாகினாள்
அன்பின் உயர்வாகினாள்
எந்தன் உயிராகினாள்
இன்ப ஊற்றினிலே பொங்கும் காற்றினிலே (காதலின்)
ஹஹாஹ் அழகின் ராணி
யாரெனக்கே இணையாவார்
ஆருயிர் வாலிபன் முன்னே
ஆடுவேன் பாடுவேன்
வலை வீசிடுவேன் வசமாக்கிடவே........