பாடகர் : சாம் சி.எஸ்
இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்
ஆண் : ஏய் இறைவனே
இறைவனே உந்தன் அருள்
பொழிவாயா இதயத்தில்
நிறைந்தே வழிவாயா
என்னுள் நீ நிறைந்தால்
அதை விட எதை எதை
நான் கேட்பேன் நீ
வருவாயா
ஆண் : வாராயோ வாராயோ
எனக்கொரு கரம் தர வாராயோ
பாராயோ பாராயோ உனக்கென
விழும் துளி பாராயோ
ஆண் : ஓஹோ ஓ
தீராயோ தீராயோ
நொடியினில் நெடுந்துயர்
தீராயோ தாராயோ தாராயோ
இதயத்தில் எரிபொருள்
தாராயோ
ஆண் : ஆடை நீதானே
என் மேடை நீதானே
என்னுள் என்னுள்ளே
ஆடும் ஆட்டம் நீதானே
ஆண் : கால்கள் நீதானே
என் காற்றும் நீதானே
என்னுள் என்னுள்ளே
ஓடும் ஓட்டம் நீதானே
குழு : இருளில் விழுவேன்
வலியினில் சுருண்டே
அழுவேன் அருவனே
உனையே தொழுவேன்
கரம் தர உடனே எழுவேன்
குழு : இறைவா இறைவா
திசை கொடு இறைவா
இறைவா இசைத்திடு
இறைவா இறைவா
அசைத்திடு இறைவா
இறைவா
ஆண் : வாராயோ வாராயோ
எனக்கொரு கரம் தர வாராயோ
பாராயோ பாராயோ உனக்கென
விழும் துளி பாராயோ
ஆண் : தடைகளே கிடையாதே
எனக்கு நிறுத்திட தெரியாதே
எனக்கு அசைவது எல்லாமே
உனக்கு நீ என்னுள்ளே
ஆண் : கருவறை நடனம்
உன் பொறுப்பு முடிவெனும்
நடனம் உன் பொறுப்பு அது
வரை மனமெங்கும் நெருப்பு
நீதானே என் இறைவா
குழு : இருளாய் இருளாய்
இருளதான் புலறாய் புலறாய்
புலறாய் புலறதான் கதிராய்
கதிராய் கதிராய் கதிரதான்
ஒளியாய் ஒளியாய் ஒளியாய்
மனதினில் நிறைவாயோ
ஆண் : என் பாதம் வைக்கின்ற
முத்தங்கள் உந்தன் சொந்தம்
என் கண்ணில் பூக்கின்ற
இன்பங்கள் உந்தன் சொந்தம்
ஆண் : என் நெஞ்சில் நீ
கேட்கும் சத்தங்கள் உந்தன்
சொந்தம் நான் காணும் கை
தட்டல் ஒவ்வொன்றும்
உந்தன் சொந்தம்
குழு : { இறைவா இறைவா
திசை கொடு இறைவா
இறைவா இசைத்திடு
இறைவா இறைவா
அசைத்திடு இறைவா
இறைவா } (4)