பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
பெண் : அள்ளித்தர தெய்வம் உண்டு
பூட்டி வைக்க பெட்டி உண்டு
அது வரை என்ன கதையோ
அது வரை என்ன கதையோ
குழு : பீச்சரபாம்……பீச்சரபாம்….பீச்சரபாம்……
பீச்சரபாம்……பீச்சரபாம்….பீச்சரபாம்……
பீச்சரபாம்……பீச்சரபாம்….பீச்சரபாம்……
பீச்சரபாம்……பீச்சரபாம்….பீச்சரபாம்……
பெண் : {திறமையிலே எதுவுமில்லை
நேரம் அது தானே வர வேண்டும்
ஆண் : திருப்பதியின் உண்டியல் போல்
செல்வம் அது வீட்டில் உனைத்தேடும்} (2)
பெண் : உண்டானபின் கோடி சொந்தம் வரும்
ஆண் : இல்லாததை சொல்லி வட்டமிடும்
தாளங்கள் மேளங்கள் ஜால்ராக்கள் கூஜாக்கள்
பின்பாட்டுத்தான் பாடி பின்னே வரும்
பெண் : மூச்சொன்று விட்டாலும்
பேச்சொன்று கை தட்டி
கொண்டாடும் கூட்டங்கள் தானே வரும்
ஆண் : ஆ……ஆ…..ஆ……ஆ……
ஆண் : எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
இருவர் : அள்ளித்தர தெய்வம் உண்டு
பூட்டி வைக்க பெட்டி உண்டு
அது வரை என்ன கதையோ
அது வரை என்ன கதையோ
குழு : ………………………
பெண் : வாழ்வதற்கு இரண்டு வழி
நேர்மை அது தேவை சிலகாலம்
ஆண் : நேர்மையிலே பலனில்லையேல்
தேவை நிறைவேறும் வழி மாறும்
பெண் : அப்பாவிகள் வாழ்வு தப்பானது
ஆண் : அஞ்சாதவன் வாழ்வு தப்பானது
எப்போது வந்தாலும் தப்பாமல் கைப்பற்று
சந்தர்ப்பம்தான் என்றும் பொன்னானது
பெண் : அப்போது தூங்காதே
பின்னாலே ஏங்காதே
அதிர்ஷ்டத்தில் பங்குண்டு என்றாவது
ஆண் : ஆஅ……ஆ……ஆ…..ஆ…..
இருவர் : எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
அள்ளித்தர தெய்வம் உண்டு
பூட்டி வைக்க பெட்டி உண்டு
அது வரை என்ன கதையோ
அது வரை என்ன கதையோ