பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி
மற்றும் ஏ. எல். ராகவன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஏ…….புள்ள சச்சாயி………
பெண் : ஏனுங்க……..ஏனுங்க……..ஏனுங்க…….
ஏ……மச்சான் மச்சாயி
ஆண் : என்னடி…….என்னடி…….என்னடி
பெண் : {ஆஹா குளிரடிக்குது
நடு நடுங்குது
குமரி பெண்ணின் பக்கத்திலே வந்து
நில்லுங்க நில்லுங்க நில்லுங்க
நில்லுங்க நில்லுங்க} (2)
ஆண் : {பொடக்காழிலே நின்னு நின்னு
போக வரப் பார்த்தேனே….ஏன்…..
பெண் : நான் பொள்ளாச்சியிலே கவுண்டர்
வீட்டிலே ஒங்க பேரை கேட்டேன்…..ஏன்…..} (2)
ஆண் : குளிச்சு போட்டு போனபோது
குறும்புக்காக சிரிச்சேன்
பெண் : நான் கொண்டை போடுற போதுகூட
ஒங்களத்தான் நெனச்சேன்
நெனச்சேன் ஆஹா நெனச்சேன்
ஆஹா நெனச்சேன்
ஆண் : ஏ…….புள்ள சச்சாயி………
பெண் : ஏ……மச்சான் மச்சாயி
ஆண் : ஏ…….புள்ள சச்சாயி………
பெண் : ஏ……மச்சான் மச்சாயி
ஆண் : {சிறுவாணி தண்ணியெடுத்து
சீதனமா கொடுத்தேன்….ஏன்….
பெண் : நான் சென்னி மலை வாழைப்பழம்
உனக்காக உரிச்சேன்…..ஏன்…..} (2)
ஆண் : மருதமலை முருகன் கிட்ட
மாலை வாங்கி முடிச்சேன்
பெண் : நான் மாம்பழத்திலே தேனைப் போட்டு
உன்ன நெனச்சு குடிச்சேன்….குடிச்சேன்……
குடிச்சேன்….குடிச்சேன்…..
ஆண் : ஏ…….புள்ள சச்சாயி………
பெண் : ஏனுங்க……..ஏனுங்க……..ஏனுங்க…….
ஏ……மச்சான் மச்சாயி
ஆண் : என்னடி…….என்னடி…….என்னடி
ஆண் : அட்ட கட்டி பக்கத்திலே
தேன் நிலவு இருக்கு
பெண் : உங்க அத்தை வீட்டு மச்சிருக்கு
வீண் செலவு எதுக்கு
ஆண் : ஆஹா…பொசுக்குன்னு போயி பூஜையை
நடத்து பொறுக்கவில்லை எனக்கு
பெண் : இங்கு பங்குனி சித்திரை
போன அப்புறம்
பார்த்துக்குவோம் அது வரைக்கும்
பொறுங்க பொறுங்க பொறுங்க பொறுங்க
ஆண் : ஏ…….புள்ள சச்சாயி………
பெண் : ஏனுங்க……..ஏனுங்க……..ஏனுங்க…….
ஏ……மச்சான் மச்சாயி
ஆண் : என்னடி…….என்னடி…….என்னடி
பெண் : ஆஹா குளிரடிக்குது
நடு நடுங்குது
குமரி பெண்ணின் பக்கத்திலே வந்து
நில்லுங்க நில்லுங்க நில்லுங்க
நில்லுங்க நில்லுங்க
ஆண் : நிக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன்
நிக்கிறேன் நிக்கிறேன்