பாடகி : வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
குழு : தானனன தானனதானன
தானனன தானனதானன தீரனன தீரனன
தீரனன தீரனன..ஆஆஆஆஆஆஆ….
பெண் : அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்..
பெண் : அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்..
பெண் : அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
குழு : …………………..
பெண் : தாமரை ஏக்கம் சூரியன் தீர்க்கும்
நாளென விடிந்தாயோ
வார்த்தைகள் தந்து காவியம் பாட
மேடையும் கொடுத்தாயோ
பெண் : நூலெனவே நான் இளைப்பேன்
நாயகன் ஆசையில் தானே
நூலெனவே நான் இளைப்பேன்
நாயகன் ஆசையில் தானே
பெண் : இந்தப் பூவை உடல்
குழு : ஆஆஆஆ…
பெண் : இன்ப வாழ்த்து மடல்
எந்தன் நாலு குணம் உன்னை தேடும் தினம்
இளமை அரும்பு தழுவி சுகங்கள் பெறும்
பெண் : அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்..
பெண் : அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
குழு : ……………………..
பெண் : வெள்ளரி கண்கள் செந்நிறமாகும்
வித்தைகள் அறிவானோ
குங்கும சாந்தை நெஞ்சினில் சாத்தும்
வேடிக்கை புரிவானோ
பெண் : அன்பு மனம் நந்தவனம்
மன்னவன் வாழ்ந்திடதானே
அன்பு மனம் நந்தவனம்
மன்னவன் வாழ்ந்திடதானே
பெண் : வானம் கைகள் தொழும்
குழு : ஆஆஆஆஆ
பெண் : வண்டு காலில் விழும்
பூக்கள் பாதை இடும் நாட்கள் வாழ்த்த வரும்
நடந்து பழக நகங்கள் எழுந்து வரும்…..
பெண் : அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது
என்னை நீ தொடும் நேரந்தான்
இந்த பூமகள் யோகம்தான்
நாளும் திருநாளே வாழ்வோம் புது வாழ்வே
தெய்வம் உன்னை நாளும் தொழுவேன்..
பெண் : அன்பே மௌனம் கலைகிறது
நெஞ்சில் வசந்தம் மலர்கிறது