திருக்குறள் - அதிகாரம் ஈகை
-
Showing 1 - 10 of 10
-
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. -
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. -
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. -
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. -
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். -
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. -
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. -
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். -
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். -
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.