வெள்ளி மணி ஓசையிலே 
உள்ளமெனும் கோயிலிலே
வெள்ளி மணி ஓசையிலே 
உள்ளமெனும் கோயிலிலே
வள்ளல் வரும் வேளையிலே
வள்ளல் வரும் வேளையிலே
வாழ்வு வரும் பூ மகளே
வெள்ளி மணி ஓசையிலே 
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும் வரை
தவமிருந்தேன் கோடி முறை
தவமிருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை
வெள்ளி மணி ஓசையிலே 
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...
மணி விளக்காய் நானிருக்க
மாளிகையாய் தானிருக்க
மணி விளக்காய் நானிருக்க
மாளிகையாய் தானிருக்க
மனது வைத்தான் சேர்ந்திருக்க
மனது வைத்தான் சேர்ந்திருக்க
கருணை வைத்தான் கை கொடுக்க
வெள்ளி மணி ஓசையிலே 
உள்ளமெனும் கோயிலிலே
கோயிலிலே...