பாடகர் : சி. எஸ். ஜெயராமன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்கவே படைகள் செல்கவே…..
குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்கவே படைகள் செல்கவே…..
குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
ஆண் : தாயின் ஆணை கேட்பதற்கு
தலை வணங்கும் தங்கமே
தலை கொடுத்து தாயின் மானம்
காத்திடுவாய் சிங்கமே
சென்று வா வென்று வா……..
குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்கவே படைகள் செல்கவே…..
ஆண் : குழலைப் போலை மழலை பேசும்
குழந்தைகளின் முத்தமும்
கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின்
கோல மொழி சத்தமும்
ஆண் : குழலைப் போலை மழலை பேசும்
குழந்தைகளின் முத்தமும்
கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின்
கோல மொழி சத்தமும்
உன் குன்று தோளில் புது பலத்தை
வழங்குமடா நித்தமும்
சென்று வா வென்று வா…….
குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்கவே படைகள் செல்கவே…..
ஆண் : மகிமை கொண்ட மண்ணின் மீது
எதிரிகளின் கால்கள்
குழு : எதிரிகளின் கால்கள்
ஆண் : மலர் பறிப்பதில்லையடா
வீரர்களின் கைகள்
குழு : மாவீரர்களின் கைகள்
ஆண் : சென்று வா வென்று வா…….
குழு : வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே
படைகள் செல்கவே படைகள் செல்கவே…..
ஆண் : ஓங்கிய வாள் போன்ற வடிவமடா
அவர் ஒளி விழிகள் உலகத்தின் படிவமடா
வேங்கைப் புலி மன்னனடா
வீரர்களின் தலைவனடா
அவர் கட்டளைக்குக் காத்திருந்த நல்லவனே
களம் நோக்கிப் புறப்படடா வல்லவனே….