பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
ஆண் : ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு ஜான் வயிறு
உனக்கு மட்டும் என்ன ஒன்பது வயிறு……
தேவைக்கு மேலே சேமிச்ச ஆளு
ஆஅ……ஆ…….ஆ…….ஆ……..
திருடனுன்னுதான் ஊர்லே பேரு…….
ஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான்
பூமியை அவனே காலால் அளந்தான்
மனுஷனை எல்லாம் மனசால் அளந்தான்….
ஓஹ்ஹோய்
என் மாமனை மட்டும் பணத்தால் அளந்தான்
ஆண் : அழகா பொறந்தது உனக்கொரு பொண்ணு
ஆடுது பார் அது மேடையில் நின்னு
மனுஷா உனக்கும் இருக்குது கண்ணு
உன் மண்டையில் மட்டும் ஏன் களிமண்ணு
ஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான்
பூமியை அவனே காலால் அளந்தான்
ஆண் : அன்றொருவன் தேர் கொடுத்தான்
அடுத்தொருவன் தலை கொடுத்தான்
கேடு கெட்ட மாமாவோ
கிழிஞ்ச குடை கொடுத்தான்
கிழிஞ்ச குடைக்கல்லவோ
வள்ளல் என்று பேரெடுத்தான்
அந்த வள்ளல் மானமெல்லாம்
சந்தியிலே இவன் கெடுத்தான்
ஆண் : கர்ணன் பொறந்தது நாட்டுக்குப் பெருமை
கம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை ஆ…..ஆ….
கம்பன் பொறந்தது தமிழுக்குப் பெருமை
பெருமையில்லாதவன் பொறந்தது கொடுமை
மாமா கொடுமை
பெருமையில்லாதவன் பொறந்தது கொடுமை
உன் பொறந்த நாளிலே இதுதான் புதுமை……
ஆண் : வானத்தை கடவுள் தலையால் அளந்தான்
பூமியை அவனே காலால் அளந்தான்