பாடகி : உமராமணன்
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பெண் : ஆஆஆ….ஆஆஆ…ம்ம்ம்ம்…ம்ம்ம்..
ஆஆஆ….ஆஆஆ…
பெண் : வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா
ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா
சாமக் கோழி கூவும் போது வேஷம் போடாதே அட
காதல் மயக்கம் தீரும் வரைக்கும் தூக்கம் புடிக்காதே
பெண் : வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா
அட ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா
பெண் : ராகமோ ரகசியம் தாளமோ அதிசயம்
காணவோ கண்களில் காமனின் அபிநயம்
இரவை வெறுக்காதே என் உறவை மறுக்காதே
ஒன்றில் ஒன்றாமல் இந்த உலகம் இயங்காதே
ஆரம்பம் ஆன பின்பு ஆனந்தம் நாளும் உண்டு
வா இங்கு சரி சமமாய்
பெண் : வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா
ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா…
பெண் : காயுதே வெண்ணிலா கனவுகள் கண்ணிலா
பாயிலே பெண்ணிலா தேயுதே காதலா
யாரும் தீண்டாம உன்ன பாத்து கனிஞ்சேனே
ஆறப் போடாதே நான் வாடிப் போவேனே
சந்நியாசம் தேவையில்ல சம்சாரம் தப்பும் இல்ல
சந்தோஷ மெட்டு சொல்லுங்க
பெண் : வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா
ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா
சாமக் கோழி கூவும் போது வேஷம் போடாதே அட
காதல் மயக்கம் தீரும் வரைக்கும் தூக்கம் புடிக்காதே
பெண் : அட வாடக் காத்து வயசுப் பாட்டு பாடக் கூடாதா
அட ஜாடக் காட்டும் ஜாதிப் பூவ சூடக் கூடாதா…