பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : ஹே…முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியா
சூரியன் சந்திரன் இந்திரன் சாட்சியா
பாடுற குயிலு ஆடுற மயிலு ஓடுற ரயிலு
காக்கா குருவி வானம் பூமி சாட்சியா
ஆண் : தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப் பூவிழி என்னை அழைக்குது மானே
மலர் உன்னைத் தொடவா…
பெண் : ம்ஹூம்
ஆண் : மடியினில் விழவா…
பெண் : ம்ஹூம்
பெண் : உனக்கென்ன மதனே…
ஆண் : அடடா
பெண் : எனக்கின்று மயக்கம் தயக்கம்
ஆண் : தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
ஆண் : அந்தி வர பாத்து…
பெண் : பாத்து
ஆண் : மின்மினியும் பூக்கும்…
பெண் : பூக்கும்
ஒம் மொகத்தப் பாத்து…
ஆண் : பாத்து
பெண் : எம் மனசும் பூக்கும்…
ஆண் : பூக்கும்
ஆண் : ஒண்ணோடு ஒண்ணா சேர உள்ளம் ஏங்குது
பெண் : மன்னாதி மன்னன் பேச்சு பொன்னத் தூவுது
ஆண் : தேனிருக்கும் பூமலர சூடிக் கொள்ளணும்
பெண் : வானிருக்கும் நாள் வரைக்கும் வாழ்ந்திருக்கணும்
பெண் : உறவுக்கு பிறந்தேன்…
ஆண் : ம்ம்ஹ்ம்
பெண் : கனவுக்குள் மலர்ந்தேன்…
ஆண் : ம்ம்ஹ்ம்
பெண் : நிலவுக்குள் வளர்ந்தேன்…
ஆண் : அடடா
பெண் : நெருக்கத்தில் மயங்க மயங்க
ஆண் : தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
பெண் : கல்யாண மேளம்…
ஆண் : மேளம்
காதலுக்கு வேணும்…
பெண் : வேணும்
ஆண் : எப்போது கேட்கும்…
பெண் : கேட்கும்
அத்தி மரம் பூக்கும்…
ஆண் : ம்ஹூம்
ஆண் : ஒன் வயசு பொண்ணுங்க
எல்லாம் புள்ளைய பெத்தாச்சு
என் நெனப்பு உங்கிட்ட வச்சேன்
என் கதை என்னாச்சு
பெண் : சீர் எடுத்து பூ முடிக்க காலம் வந்துரும்
ஆண் : ஊர் முழுக்க பந்தலிட்டு தாலி கட்டணும்
தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே
ஆண் : மலர் உன்னைத் தொடவா…
பெண் : ம்ஹூம்
ஆண் : மடியினில் விழவா…
பெண் : ம்ஹூம்
பெண் : உனக்கென்ன மதனே…
ஆண் : அடடா
பெண் : எனக்கின்று மயக்கம் தயக்கம்
ஆண் : தென்றல் அடிக்குது சிந்து பிறக்குது தேனே
செண்பகப்பூவிழி என்னை அழைக்குது மானே