தவழ்ந்திடும் தங்க பூவே
தலையசைக்கும் வெண்ணிலாவே
மந்திர புன்னகைகள் உன்னில் தாராலம்
கருவறை வாசல் தாண்டி கைகளிலே வந்து சேர்ந்தாய்
கதைகள் உன்னிடத்தில் சொல்ல ஏராளம்
மடியினில் என்னை சாய்ப்பேனே
மார்பினில் உன்னை சுமப்பேனே
உனது இரு விழிகளிலே எந்தன் கனவுகள்
எனதுயிர் நீயின்றி இல்லை விடியல்கள்
சில நேரம் கோபம் கொள்வாய்
சிரித்தே பின் மாயம் செய்வாய்
சிறு சிறு குறும்புகளாலே
என்னை நீ வெல்வாயே
அழகாய் எந்தன் தோளில் தூலிதனெய்வாயே
இன்சொல்லும் மொழியாவும் இனிமை கேட்பேன்
இவள் கரம் பிடித்தேதான் உலகை ரசிப்பேன்
யார் இசைக்கும் உ;ன பேச்சு தாலாட்டும் எனக்கு
யாழி நீயே உன்மடியே அன்னை மடி எனக்கு
அநியாய சேட்டை செய்வாய்
அயர்ந்தே பின் தூக்கம் கொள்வாய்
வரம் தரும் தேவதை நீயே
வரமாய் வந்தாயே
நிரமற்ற தூறிகை நானே
மரனங்கள் கண்டாயே
எந்தன் மரனத்தின் நேரம் நெறுங்கும்போதும்
உந்தன் மலர் முகம் கண்டால் ஜனனம் ஏங்கும்
விழிகளில் ஈரங்கள் நீராட்டிப் போகும்
இவளன்றி என் நாட்கள் தனிமையில் சாகும் ம்………