பாடகி : பி. சுஷீலா
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : வி. குமார்
பெண் : { ஆஆ ஆஆ
ஆண் : ம்ம் ம்ம்ம்ம் } (3)
ஆண் : { தாமரை
கன்னங்கள் தேன்
மலர் கிண்ணங்கள் } (2)
ஆண் : எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
பெண் : { மாலையில்
சந்தித்தேன் மையலில்
சிந்தித்தேன் } (2)
பெண் : மங்கை நான்
கன்னித்தேன் காதலன்
தீண்டும்போது
கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
மாலையில் சந்தித்தேன்
ஆண் : { கொத்து மலர்
குழல் பாதம் அளந்திடும்
சித்திரமோ
பெண் : ஆஆ ஆஆ…
ஆண் : முத்து நகை
தரும் மெல்லிய
செவ்விதழ் ரத்தினமோ
பெண் : ஆஆ ஆஆ…} (2)
பெண் : துயில் கொண்ட
வேளையிலே குளிர் கண்ட
மேனியிலே துணை வந்து
சேரும்போது சொல்லவோ
இன்பங்கள்
பெண் : மாலையில்
சந்தித்தேன் மையலில்
சிந்தித்தேன் மங்கை நான்
கன்னித்தேன் காதலன்
தீண்டும்போது கைகளை
மன்னித்தேன்
பெண் : { ஆலிலை
மேலொரு கண்ணனைப்போல்
இவன் வந்தவனோ நூலிடை
மேலொரு நாடகம் ஆடிட
நின்றவனோ } (2)
ஆண் : சுமை கொண்ட
பூங்கொடியின் சுவை
கொண்ட தேன் கனியை
உடை கொண்டு மூடும்போது
உறங்குமோ உன்னழகு
ஆண் : தாமரை
கன்னங்கள் தேன்
மலர் கிண்ணங்கள்
ஆண் : எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
பெண் : ஆஆ மாலையில்
சந்தித்தேன் மையலில்
சிந்தித்தேன்
பெண் : மங்கை நான்
கன்னித்தேன் காதலன்
தீண்டும்போது
கைகளை மன்னித்தேன்