பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ…….
ஆ……ஆஅ…….ஆ……ஆ…..ஆ……
ஆண் : தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்
தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்…..
ஆண் : சின்ன சின்ன தாகம்
கண்ணுக்குள்ளே ஊறும்
நினைவோ நிஜமோ…….
ஆண் : தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்…
ஆண் : முதல் பார்வையோ……விதையானது
முதல் பார்வையோ……விதையானது
மறு பார்வையோ மழையானது
விதையெழுந்து இனம் பிளந்து துளிர்விட்டது
இவளுக்கு பரம்பரை குளிர் விட்டது
ஆண் : தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்…
ஆண் : சுடும் மாங்கனி……வெடிக்கின்றதே
சுடும் மாங்கனி வெடிக்கின்றதே
நகக் கண்களும் துடிக்கின்றதே
இரவுகளை இமைகளின் மேல் சுமக்கின்றதே
சுமப்பது சுகம் என சிரிக்கின்றதே…..
ஆண் : தளிர்களில் பூக்கள்
தங்கள் முகம் பார்க்கும்
வசந்தக் காலம்…
ஆண் : சின்ன சின்ன தாகம்
கண்ணுக்குள்ளே ஊறும்
நினைவோ நிஜமோ…….
ஆண் : லல லல லாலா லல லல லாலா
லலல லால் லா…….