பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : காதல் நினைவே கனவே
காதல் நினைவே கனவே
கானல் நீரில் தாகம் தீர்க்கும்
பேதை பெண் இங்கே
ஆண் : காதல் நினைவே கனவே…..
ஆண் : நீரில் தோன்றும் அலைகளைப் போலே
நெஞ்சில் நூறு நினைவுகள் ஆட
தோன்றும் உறவு……யாவும் கனவு……
வானில் தோன்றும் வானவில் போல
வாடைக் காற்றின் வாழ்வினை போல
ஆசை நெஞ்சம் இங்கே…
ஆண் : காதல் நினைவே கனவே
கானல் நீரில் தாகம் தீர்க்கும்
பேதை பெண் இங்கே
ஆண் : இணைந்தே இருந்தும் தனிமையில் வாழும்
இளமை நினைவோ இருட்டினில் வாழும்
ஏதோ உணர்வு……ஏங்கும் மனது…..
தனியே தொடரும் ஒரு வழி பயணம்
தணலில் தவிக்கும் மனதுக்கு சலனம்
தோன்றும் நெஞ்சம் இங்கே……
ஆண் : காதல் நினைவே கனவே
கானல் நீரில் தாகம் தீர்க்கும்
பேதை பெண் இங்கே
ஆண் : காதல் நினைவே கனவே….