பாடகர் : சத்யப்ரகாஷ்
இசை அமைப்பாளர் : இசை அரசன்
ஆண் : தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழி வந்து வீசு எங்கள்
மண்ணின் சுகம் கண்டு பேசு
ஆண் : தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழி வந்து வீசு எங்கள்
மண்ணின் சுகம் கண்டு பேசு
ஆண் : உயிரைக் கொடுத்த அன்னை
கயிறாய் கிடப்பாளோ?
எலும்பைக் கொடுத்த தந்தை
நரம்பாய் கிடப்பாரோ?
ஆண் : நல்லூர் முருகன் கோயில்மணியில்
நல்ல சேதி வருமோ?
உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்
உயிரும் உடலும் நலமோ?
ஆண் : ஓடிய வீதிகள் சுகமா?
எங்கள் ஒருதலைக் காதலி சுகமா?
பாடிய பள்ளிகள் சுகமா?
உடன் படித்த அணில்கள் சுகமா?
ஆண் : ஒருமுறை வந்து சொல்லிப்போ
எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ
ஆண் : தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழி வந்து வீசு எங்கள்
மண்ணின் சுகம் கண்டு பேசு
ஆண் : முல்லைத் தீவின் கதறல்
மூச்சில் வலிக்கிறதே
நந்திக் கடலின் ஓலம்
நரம்பை அறுக்கிறதே
ஆண் : பிள்ளைக்கறிகள் சமைத்து முடித்த
தீயும் மிச்சம் உள்ளதோ?
எங்கள் ஊரை எரித்து மீந்த
சாம்பல் சாட்சி உள்ளதோ?
ஆண் : வன்னிக்காடுகள் சுகமா?
எங்கள் வல்வெட்டித்துறையும் சுகமா?
காய்ந்த கண்ணீர் சுகமா?
இன்னும் காயாத குருதி சுகமா ?
ஆண் : ஒருமுறை வந்து சொல்லிப்போ
எங்கள் உயிரை கொஞ்சம் அள்ளிப்போ
ஆண் : தமிழ் ஈழக் காற்றே!
தமிழ் ஈழக் காற்றே!
விண்ணின் வழி வந்து வீசு எங்கள்
மண்ணின் சுகம் கண்டு பேசு