பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : ஹம்சலேகா
ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்
ஆண் : ஆதரவா என் தோள் தரவா
கெஞ்சுது கெஞ்சுது தேகம்
மாசு இல்லா மாமனுக்கு
சம்மதம் தந்திட வேணும்
மந்திரம் சொல்லிட வேணும்
ஆண் : ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்
பெண் : சக்கரை பேச்சு பேசி உங்க
வித்தைய காட்ட வேண்டாம்
பத்தர மாத்து தங்கம் என
முத்திர போட வேண்டாம்
தொட்டு தாலி கட்டியதெல்லாம் வேஷமானதா
ஆண் : சத்திய பேச்சுக்காரன் ஹ
நான் சொல்லுறேன் கேளு மானே
நம்பிக்கை ஓட்டு கேட்டா என் உசிர கூட தாறேன்
உன்னை காக்கும் காவல்காரன் நாந்தானடி
பெண் : பாசமெல்லாம் சந்தேகத்துல
விலகிப் போச்சு மாமா
ஆண் : வா குயிலே செந்தேன் மலரே
விளக்கம் ஒண்ணு தாரேன்
அட விளங்கிப் போகும் மானே
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்
உன்னை கண்டதும் நெஞ்சில தா..க..ம்
ஆண் : நித்திரை போச்சு மானே
என் வித்தைய காட்டலாமா ஹஹ
பத்தினி தோட்டம் தானே
நான் ஒத்திகை பார்க்கலாமா ஹ
பட்டாம் பூச்சி பாடுற பாட்டு பூவில் கேட்குதாஆஆஆ
பெண் : மங்கைய பார்த்து பார்த்து
ஒரு மன்மத காத்து வீசும்
வஞ்சனை ஏதும் இல்ல இனி பஞ்சணை தானே எல்ல
வட்டம் போடும் வாலிப ஆசை தொட்டா தீருமா
ஆண் : நூலிடையே திண்டாடுறியே சேர நாட்டு தேரே
பெண் :வாய் திறந்து செவ்வாய் திறந்து
கதைய சொல்லித் தாரேன் நீ காவல்காரன் தானே
ஆண் : ஹ ராக்குயிலே…
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்
ஆண் : ராக்குயிலே…
பெண் : கண்ணுல சொக்குது ஏக்கம்
என்னை கண்டதும் கட்டிக்க பார்க்கும்
ஆண் : ராக்குயிலே…பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
ஆண் : ராக்குயிலே…ஹஹஹ பெண் : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..