பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
ஆண் : பொன் உதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்…….
ஆண் : போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
குழு : ……………………
ஆண் : எத்தனையோ ரத்த வரிகளை
எங்கள் முதுகினில் தந்தவரே
அத்தனையும் வட்டி முதலுடன்
உங்கள் கரங்களில் தந்திடுவோம்
ஆண் : {நந்தன் இனமே
பெறும் அரியாசனமே
அந்த தினமே வருமே…..} (2)
எட்டுத்திக்கும் வெற்றி எழுமே
மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை
ஆண் : வேர்வை குலம் வீறு கொண்டே
போரிடும் போரிடும் வெல்லும் வரை
அலைகளும் ஓய்ந்து போகுமோ…..
ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
ஆண் மற்றும் குழு : பொன் உதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்…….
ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா….
ஆண் : இன்னும் இந்து பள்ளுப் பறையென
சொல்லும் மடமைகள் உள்ளதடா
நித்தம் இரு சேரி சிறகுகள்
வெள்ளி சிறகென ஆகுதடா
குழு : ஆஆ…. ஆஆ…..
ஆண் : சின்னப் பொறியே வெறும் அனலாகுமே
சிங்க இனமே எழுமே……
சின்னப் பொறியே வெறும் அனலாகுமே
சிங்க இனமே எழுமே……
ஆண் : அஞ்சி நின்ற பஞ்சப்படையே
கொஞ்சமாவது நெஞ்சம் நிமிர்கையில்
எங்கள் மனம் பொங்கி அழுகையில்
குங்கும கங்கையும் பொங்கிடுமே
மலைகளும் சாய்ந்து போகுமோ……….
ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
ஆண் மற்றும் குழு : பொன் உதயம் கண்டிடவே
உதிரம் முழுதும் உதிரும் வரையில்…….
ஆண் மற்றும் குழு : போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா