பாடகி : சுனந்தா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
வாசல் என் வாசல்
உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பெண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
பூவே செம்பூவே
பெண் : நிழல் போல நானும்
ஆஆஆஆஹா….
நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம்
நெடுங்கால பந்தம்
பெண் : கடல் வானம் கூட
நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம்
தடம் மாறிடாது
பெண் : நான் வாழும் வாழ்வே
உனக்காக தானே
நாள் தோறும் நெஞ்சில்
நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பெண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
வாசல் என் வாசல்
உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பெண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
பூவே செம்பூவே
பெண் : உனைப்போல நானும்
ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும்
கிளிப் பிள்ளை தானே
பெண் : உனைப்போல நானும்
மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில்
விளையாடும் பொம்மை
பெண் : நான் செய்த பாவம்
என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான்
பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பெண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
வாசல் என் வாசல்
உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதான் ஒரு பூவின் மடல்
பெண் : பூவே செம்பூவே
உன் வாசம் வரும்
பூவே செம்பூவே