பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
குழு : ……………………….
ஆண் : பூவே உன்னை கட்டிக் கொண்டு
பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று
மேளம் கொட்டட்டா
ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது
பெண் : ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது
பெண் : பூவே உன்னை கட்டிக் கொண்டு
பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று
மேளம் கொட்டட்டா
குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….
அ….ஆ…..அ…..ஆ….ஆ….ஆ….
பெண் : உன்னைக் கண்ட பின்னே
என்னைக் காணோம் கண்ணா
எனை கண்டு கொள்ள வந்தேன்
உன் கண்ணில் இன்று கண்டேன்
பெண் : நாளை தோன்றும் புல்லும்
அன்பே நம் பேர் சொல்லும்
அட வானும் மண்ணும் மாறும்
நம் காதல் நின்று வாழும்
பெண் : மன்னா நீயும் இல்லை என்றால்
மண்ணில் நானும் இல்லை
மானே உந்தன் மூச்சில் தானே
மண்ணில் நானும் வாழ்கிறேன்
பெண் : பூவே உன்னை கட்டிக் கொண்டு
பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று
மேளம் கொட்டட்டா
ஆண் : ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது
குழு : …………………………
ஆண் : ஆ…ஹா….ஆ…
பெண் : ம்ம்ம் ம்ம்…..
ஆண் : ஆ…ஹா….ஆ…
பெண் : ம்ம்ம் ம்ம்…..
ஆண் : கண்கள் காதல் சின்னம்
கன்னம் ரோஜாக்கிண்ணம்
பசி தீர்ந்து போகும் வண்ணம்
பரிமாற வேண்டும் இன்னும்
பெண் : அள்ளித் தந்தேன் முத்தம்
என்னில் ஏதோ சத்தம்
விழி மூடவில்லை நித்தம்
இரவோடு என்ன யுத்தம்
ஆண் : கண்ணே நீயே தஞ்சம் என்று
வந்தேன் இங்கே வா வா
ஜென்மம் மாறும் என்னும் போதும்
சொந்தம் மாறாதல்லவா…….
ஆண் : பூவே உன்னை கட்டிக் கொண்டு
பூஜை செய்யட்டா
நேரம் நல்ல நேரம் என்று
மேளம் கொட்டட்டா
பெண் : ஓடும் நதி ரெண்டும் ஒன்றானது இன்று
நாம் போகின்ற பாதைகள் சோலை ஆனது
இருவர் : லலலா லலலா லால லல லால்லா
லலலா லலலா லால லல லால்லா