பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் (பிச்சை)
அம்மையும் அப்பனும் தந்ததால் - இல்லை
ஆதியின் வல்வினை சூழ்ந்ததால்
இம்மையை நான் அறியாததால் - சிறு
பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திடப் (பிச்சை)
அத்தனைச் செல்வமும் உன் இடத்தில் - நான்
பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்? - வெறும்
பாத்திரம் உள்ளது என் இடத்தில் - அதன்
சூத்திரமோ அது உன் இடத்தில்
ஒரு முறையா? இரு முறையா?
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையால் பழ வினையால்
கணம் கணம் தினம் எனைத் துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே - உன்
அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர்ப்பதத்தால் தாங்குவாய் - உன்
திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெறப் (பிச்சை)