பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆ….அ…..ஆ….
ஆஅ……ஆ…..ஆ…..ஆ….அ…..ஆ….
ஆ……ஆ……ஆ……ஆ…..அ…..அ….ஆ….
பெண் : ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல
உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன
பெண் : அட வாய்யா மடியில சாஞ்சு
என் ராசா ஒரு முறை தூங்கு
பெண் : ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல
பெண் : தாளமலக் காட்டிலே
தந்தனத்தோம் பாட்டிலே
தொட்டு வெளையாண்டதும்
தோளில் வந்து சாஞ்சதும்
பெண் : வானம் அறியும்……மேகம் அறியும்……
துள்ளி ஓடும் மானும் அறியும்
ஆகாசம் பூலோகம்……..
ஆ…..ஆஅ…..அ….அ….ஆ….
ஆகாசம் பூலோகம் சாட்சி சொல்லும் கேட்போமா
அய்யா அது என்ன பொய்யா
அய்யா அது என்ன பொய்யா…
பெண் : ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல
பெண் : நந்தவனம் தீஞ்சதா
காவேரிதான் காஞ்சதா
நம்ம சொந்தம் போனதா
கட்டுக் கதை ஆனதா
பெண் : பாயில் படுத்த காதல் மனசு
நோயில் துடிச்சா தாயின் மனசு
ராசாவே வாடாதே….ஏ…..ஏ…..
ராசாவே வாடாதே ஊஞ்சல் நானும் போடுவேன்
ராசா ஒரு முறை தூங்கு
என் ராசா ஒரு முறை தூங்கு……..
பெண் : ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல
உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன
பெண் : அட வாய்யா மடியில சாஞ்சு
என் ராசா ஒரு முறை தூங்கு
பெண் : ஒரு நாள் ஒரு பொழுது
உன நான் பிரிஞ்சதில்ல