பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வி. குமார்
ஆண் : ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா ஓடிவா….
ஆண் : ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா ஓடிவா….
ஆண் : நான் பாடும் ராகங்கள்
கார்கால மேகங்கள்
நான் பாடும் ராகங்கள்
கார்கால மேகங்கள்
தேன் மாரி பெய்யும் தீரும் தாகங்கள்
ஆண் : தென்றலின் ஓசை பாட்டாக
தென்னையில் ஆடும் கீற்றாக
என் மனம் ஆடும் தானாக
கீதமே நாதமே ஓடிவா
ஆண் : ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ஆண் : ஒரு கோடி இன்பங்கள்
ஒன்றாக வந்தாலும்
ஒரு கோடி இன்பங்கள்
ஒன்றாக வந்தாலும்
உறவாடும் உள்ளம் இசை பண்ணோடு
ஆண் : எத்தனைக் காலம் வாழ்ந்தாலும்
என்னென்ன கோலம் கொண்டாலும்
என்னுயிர் நாதம் சங்கீதம்
கீதமே நாதமே ஓடிவா
ஆண் : ஓராயிரம் கற்பனை
நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே
ஓடிவா ஓடிவா….
ஓடி வா…..ஓடி வா…..ஓடி வா….. ஓடி வா….