பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஓஹோ.. ஓஹோ..
ஓஹோ….ஓ..ஓஹோ..ஓ…
முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
ஆண் : {முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா} (2)
ஆண் : {அடி நீதான்
நான் பார்த்த தேவதை
அந்த வானம்
காணாத தாரகை……} (2)
ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா
பெண் : மண்ணில் ஒரு வானவில்லை
கொண்டு வந்ததாரடி
மாலையிலே நான் மயங்க
மஞ்சம் ஒண்ணு கேளடி
ஆண் : சொர்க்கமணி கதவுதான்
தட்ட தட்டத் திறக்குது
எப்பொழுதும் இருட்டில்தான்
விடுதலை கிடைக்குது
பெண் : மேகமோ……அசைந்தசைந்தாடுது……
வேகமாய் மழை வரப் போகுது
ஆண் : ஒரு காதல் மின்சாரம் பாயுது…….
பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது….
ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா
பெண் : ………………………………………………….
ஆண் : நட்சத்திரப் பூப்பறிச்சு
நான் உனக்கு சூட்டுவேன்
சந்திரனில் பொன்னெடுத்து
உன் கழுத்தில் பூட்டுவேன்
பெண் : நீ சிரிக்கும் சிரிப்பிலே
கோயில் மணி ஒலிக்குது
கையணைக்கும் பொழுதிலே
என்னுயிரில் இனிக்குது
ஆண் : பூமியா இது அந்த வானமா
எங்கு நான் இருப்பது கூறம்மா
பெண் : ஒரு காதல் மின்சாரம் பாயுது…….
பனி விழும் குளிர் காற்றும் தீயாக வீசுது….
ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா
ஆண் : அடி நீதான்
நான் பார்த்த தேவதை
அந்த வானம்
காணாத தாரகை…..
ஆண் : முத்துமணி தேரிருக்கு
முல்லைக்கொடி போவதற்கு
பூமியிலே பாதம் பட்டால் ஆகுமா
பொன் மயிலே என் மனசு தாங்குமா