மரஹபா ஆவோ நா……… மனதிலே நீதானா
நீயுமே நானம் துள்ளினேனா புள்ளிமா………னா
வெண்ணிலா பிறையே வந்ததேன் தரையே
ஈகை இறைவனின் கொடை நீயோ……
வெண்ணிலா திசையே எந்தன் ஏழிசையே
மன விளக்கதன் ஒளி நீயோ
கண்ணில் கனா கனா கனா
அதனால் கலைந்தேன் நா………ன் (மரஹபா)
அன்னை மடியை தேடும் குழந்தை
கண்டவுடன் தாவிடுதே
அந்தக்கதைப்போல் ஆசை மனம்
உன்னழகை ஏந்திடுதே
இந்த சுகம் சுகம் நிதமும் தொடர
எண்ணங்கள் ஏங்கிடுதே
கொஞ்சம் பொரு பொரு
இதை நீ நகர்ந்தால்
என்னுள்ளம் தேங்கிடுதே
நினைவே சுடுதே
மனமே ஏ ஏ ஏங்கிடுதே…… (மரஹபா)
வெள்ளிச்சலங்கை ஓசை மறக்கும்
வெட்கப்பட நீ சிரித்தா……ல்
இன்னும் தினமும் வாழப்பிடிக்கும்
கண்கள் உனைப்பார்த்திருந்தால்
மஞ்சள் நிலா நிலா மசப்பை அடையும்
உன் சொல்லைக்கேட்டிருந்தால்
அந்திப் பகல் பகல் பகல் இரவிக்கை அணியும்
உன் கையில் நான் இருந்தால்
எனை நீ… அடைந்தால்
அதுவே…… பெருநாள் (மரஹபா)