பாடகி : ஜ்யோத்ஸ்னா ராதாகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : எஸ். தமன்
பெண் : மந்தாரா மந்தாரா
மயிலாடும் மந்தாரா
மடலோடு தூறல் தந்தாரா
பெண் : மந்தாரா மந்தாரா
குரலுதும் மந்தாரா குழலேறி
காதில் சென்றாரா
பெண் : கிளையினில்
தாவும் காகம் இலையினை
நீரில் போடும் அதை
அறியாமல் ஓடும் நிலை
உணர்வாயா
பெண் : உன்னை அறியாமல்
நீயும் இவள் மண ஓடை
மேலே ஒரு இலை வீசி
போனாய் உயிர் படர்வாயா
பெண் : ஓ பொல்லாத மேகம்
பூக்கும் என்னோடு போரிட
பார்க்கும் இனி என்னாகுமோ
மலர் மண்ணாகுமோ அதை
ஏந்தி கொள்வாயா
பெண் : மந்தாரா மந்தாரா
மனதிலாடும் மந்தாரா
மடலின் மேலே தூறல்
தந்தாரா
பெண் : மந்தாரா மந்தாரா
குழலாய் பேசும் மந்தாரா
குழலிலேறி காதில்
சென்றாரா
பெண் : மந்தாரா சிங்காரா
கள்ளரா ரீங்கரா
பெண் : ஆஹா
மந்தாரா மந்தாரா
மயிலாடும் மந்தாரா
மடலோடு தூறல் தந்தாரா
பெண் : விதவிதமாக
பொய்களை அள்ளி
மனதினில் பூசி மறைத்தேனே
நிஜங்களை காட்டும் விளம்பரமாக
சிரிப்பினை இதழில் இணைத்தேனே
பெண் : உன்னை வந்து
சேரும் ஆசை உயிரினில்
ஏறும் ஓசை முதல் முதலாக
கேட்டேன் உன்னை அடைவேனா
பெண் : பெண்ணோடு ஏனோ
மோதல் உண்டாக்குதே உன்
காதல் நீ தினம் தரும் உயிர்
கலவரம் கலைக்காமல்
நின்றேனா
பெண் : மந்தாரா மந்தாரா
மனதிலாடும் மந்தாரா
மடலின் மேலே தூறல்
தந்தாரா
பெண் : மந்தாரா மந்தாரா
குழலாய் பேசும் மந்தாரா
குழலிலேறி காதில்
சென்றாரா
பெண் : மந்தாரா மந்தாரா
மயிலாடும் மந்தாரா
மடலோடு தூறல் தந்தாரா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஹா ஆ